மும்பை: சரிவு-உயர்வு என ஏற்ற, இறக்கங்களோடு இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் 0.75% அளவுக்கு உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 475 புள்ளிகள் உயர்ந்து 74,328 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. ஆக்சிஸ் வங்கி பங்கு 5.98%, எஸ்பிஐ 5%, ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல் 2.5%, நெஸ்லே, சன் ஃபார்மா பங்குகள் தலா 2% விலை உயர்ந்தன. ஐடிசி பங்குகள் 2%, என்டிபிசி பங்கு 1.9%, எம்&எம் பங்கு 1.7%, எச்சிஎல் டெக் பங்கு 1.6% விலை உயர்ந்து விற்பனையாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 168 புள்ளிகள் உயர்ந்து 22,570 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
The post மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475 புள்ளிகள் உயர்ந்து 74,328 புள்ளிகளில் நிறைவு..!! appeared first on Dinakaran.